புதுச்சேரி: புதுவையில் தனிநபர் மதுபான விற்பனை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேர்தலை ஒட்டி இரு மாநில எல்லைகளில் மது கடத்தலை தடுக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலை ஒட்டி மதுபான கடத்தலை தடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் புதுச்சேரி தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி காவல்துறை, கலால்துறை உயரதிகாரிகள் பலரும் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி கலால்துறை ஆணையர் சுதாகர் கூறுகையில், புதுச்சேரியில் மதுக்கடத்தலை தடுக்க 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.