கடலூர்: இந்தியாவில் ஜனநாயகத்தை வேரறுக்கும் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதே பிரதானம் என்பதால் அதனை நோக்கியே தங்களது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சென்று கொண்டிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். கடலூரில் பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பந்து திமுக-வின் கைகளில் இருப்பதால் எத்தனை தொகுதிகள், என்னென்ன தொகுதிகள் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள் என்று அழகிரி குறிப்பிட்டுள்ளார். மேலும் எத்தனை தொகுதிகள் என்பது முக்கியமல்ல என்றும் இணைந்து செயல்பட்டு பாரதிய ஜனதாவை வேரறுப்பதே தங்களின் முக்கிய நோக்கம் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார்.