ஊட்டி: கேரள சுற்றுலா பயணிகள் வருகை முற்றிலும் குறைந்ததால் சூட்டிங்மட்டம் பகுதி வெறிச்சோடியது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று வேகம் அதிகரித்துள்ளது. கேரளா எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்திற்குள் தொற்று பாதிப்பு பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் மாநில எல்லைகளில் உள்ள 6 ேசாதனை சாவடிகளிலும் நிறுத்தப்பட்டு அதில் பயணிக்கும் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.