திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே டிராக்டரில் வைக்கோல் கட்டுகள் ஏற்றி சென்ற போது தாழ்வான மின்கம்பியில் உரசியதில் தீப்பிடித்து எரிந்து டிராக்டர் டிப்பர் சேதமானது.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சிங்களாந்தி கவரக்குளம் பகுதியில் விவசாயி முத்துவேல் என்பவருக்கு சொந்தமான டிராக்டர் டிப்பரில் வைக்கோல் கட்டுகள் ஏற்றிச்சென்றார். அப்போது அதே பகுதியில் தாழ்வான மின் கம்பியில் வைக்கோல் கட்டுகள் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது.