சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6, 7ம் தேதிகளில் காங்கிரசில் நேர்காணல்: கே.எஸ்.அழகிரி தகவல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் காங்கிரஸ் தோழர்களிடமிருந்து பிப்ரவரி 25ம் தேதி முதல் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. விருப்ப மனு அளிக்க இறுதி நாள் மார்ச் 5ம் தேதி. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த அனைவரிடமும் மார்ச் 6 மற்றும் 7ம் தேதிகளில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. விருப்ப மனு சமர்ப்பித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் நேர்காணலில் அவசியம் பங்கேற்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: