சென்னை: மெட்ரோ ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.54 லட்சம் பேர் பயன்படுத்தியுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. இந்தநிலையில், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரையில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவை தொடங்கப்பட்ட பிறகு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அந்தவகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 20.54 லட்சம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர்.