அகமதாபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட விளையாட்டு அலுவலர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். தடுப்பூசி போடும் பணி தொடங்கி 2 மாதங்கள் ஆன நிலையிலும், விளையாட்டு வீரர்களுக்கு போடப்படவில்லை. தடுப்பூசி குறித்த சந்தேகங்களும் அதற்கு காரணமாக இருந்தன. இந்நிலையில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, மற்றவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.