தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை ஏப்.30க்குள் நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:  ராமநாதபுரம் மாவட்டம், கிடாதிருக்கை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜேக்கப் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தலைமை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தினால் பலருக்கு உரிய இடம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த தடை விதிக்க வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திய பிறகு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.  இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதி, தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கான பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆகியவற்றை ஏப்.30க்குள் நடத்த உத்தரவிட்டார்.

Related Stories: