குன்றத்தூர்: தாம்பரத்திலிருந்து ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி நேற்று பூந்தமல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கம் அருகே வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சென்டர் மீடியனை உடைத்து கொண்டு, சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதை கண்டதும், அவ்வழியே சென்ற பிற வாகன ஓட்டிகள், உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடிச்சென்று லாரியில் மாட்டிக்கொண்டிருந்த ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.