சென்னை: எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டால் கூட்டணிக்கு தயார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நேற்று டிடிவி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணி குறித்து சில முக்கிய கட்சிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். இறுதி முடிவு வந்ததும் அதுகுறித்து அறிவிப்பேன். யார் வந்தாலும் அவர்களுடன் பேச தயார். தேர்தலில் சசிகலாவின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை அவர் தான் தெரிவிப்பார். எங்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு கூட்டணி வைக்க வரும் கட்சிகளை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அதிமுகவை மீட்டெடுப்போம்.