டெல்லியில் ஒரேநாளில் 217 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: டெல்லி ஒரே நாளில் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் யாரும் பலியாகவில்லை. டெல்லியில் நேற்று முன்தினம் 66,624 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் 217 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் 6,39,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று யாரும் பலியாகவில்லை. இதனால் ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 10,911ஆகவே நீடித்தது. மேலும் 68 பேர் நோயில் இருந்து குணமாகினார்கள்.

Related Stories: