பூந்தமல்லி: கார் மோதி, பெண் கட்டிட தொழிலாளி, பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம் பிஜி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் சரோஜா (48) கட்டிட தொழிலாளி. நேற்று காலை சரோஜா, பெருங்களத்தூரில் நடக்கும் கட்டுமான வேலைக்கு புறப்பட்டார். இதையொட்டி போரூர் அருகே தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரவாயல் நோக்கி வேகமாக வந்த கார், சரோஜா மீது வேகமாக மோதியது.