சென்னை: தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியதாவது: முதியவர்கள் மற்றும் இணை நோய் பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பி வருகிறது. பொதுமக்களுக்காக கோவின் 2.0 செயலில் (COWIN 2.0 APP) உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலில் பதிவு செய்துவிட்டும் வரலாம். பதிவு செய்ய தெரியாதவர்கள் ஆதார் அட்டை, ஓய்வூதிய அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை என ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் அருகில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு சென்றால், அங்குள்ளவர்கள் செயலில் பதிவு செய்து தடுப்பூசியை போடுவார்கள்.