குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்வதை உறுதிப்படுத்த உத்தரவு..!!

டெல்லி: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்கள் உள்ளூர் செய்தித்தாள்களில் தங்கள் மீதான வழக்குகள் குறித்து விளம்பரம் செய்வதை உறுதிப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் இது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருந்தது. அதில் ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிருக்கிறார் எனில் அவரது குற்றப்பின்னணி, அவர் எந்த கட்சியை சார்ந்தவர், கட்சிக்கு குற்றப்பின்னணி குறித்த விவரங்களை அவர் அனுப்பியுள்ளாரா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளூர் செய்தித்தாளிலோ அல்லது தேசிய செய்தி தாளிலோ விளம்பரம் செய்திருக்க வேண்டும்.

குறிப்பாக எழுத்தின் அளவு 12 அளவில் இருக்க வேண்டும் என்று பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதிசெய்யுமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையம், அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியிருக்கிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, அங்கீகரிக்கப்படாத மற்றும் பதிவுசெய்யப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைமை அலுவலகங்களுக்கு இது தொடர்பான விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றப்பின்னணி வேட்பாளர்கள் தொடர்பாக உரிய விளக்கங்களையும், உத்தரவுகளையும் பிறப்பிக்க மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தேர்தலில் போட்டியிடுவார் விளம்பரங்கள் கொடுத்ததற்கான ஆதாரங்களை சீலிடப்பட்ட கவரில் தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: