புதுடெல்லி: வெளிநாட்டு இ-வர்த்தக நிறுவனங்களின் ஜிஎஸ்டி திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக வரும் மார்ச் 5ம் தேதி முதல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சிக்கல் போன்வற்றை எதிர்த்து அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சிஏஐடி) கடந்த பிப். 26ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. இந்நிலையில், வெளிநாட்டு இ-வர்த்தக நிறுவனங்களின் ஜிஎஸ்டி திருத்தங்கள் மற்றும் முறைகேடுகளை கண்டித்து வரும் மார்ச் 5ம் தேதி முதல் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.