புதுடெல்லி: ‘வழக்கத்தைவிட நடப்பு கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பொதுவாக, மார்ச் முதல் மே வரையிலான காலகட்டம் கோடையாக வரையறுக்கப்படுகிறது. தற்போது மார்ச் தொடங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் வெப்ப நிலவரம் பற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.