அக்கா கணவர் அடித்து கொலை: மைத்துனர் கைது

சென்னை: கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (54). இவருக்கும், இவரது மைத்துனர் சிவராமனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு  ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சிவராமன் தனது அக்கா கணவர் நடராஜனை கீழே தள்ளி பலமாக  தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு  நேற்று முன்தினம்  இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து,  போலீசார் சிவராமனை கைது செய்தனர்.

Related Stories: