சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி வளாகத்தில் உள்ள கைப்பந்து திடலில் கடந்த ஆண்டு ஏ டிவிஷன் கைப்பந்து போட்டிகள் நடந்து வந்தன. கொரோனா பரவல் காரணமாக 2020, பிப். 16ல் போட்டிகள் நிறுத்தப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், நிறுத்தப்பட்ட போட்டிகளை மீண்டும் நடந்த சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் முடிவு செய்தது. அதற்கேற்ப ராதாகிருஷ்ணன் ஹாக்கி வளாகத்தில், புதுப்பிக்கப்பட்ட மாநகராட்சி கைப்பந்து திடல் திறக்கப்பட்டது.