வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், `புதிய கட்சி தொடங்குவதில் விருப்பம் இல்லை’ என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில், 2வது முறையாக போட்டியிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். அப்போது டிரம்ப் புதிய கட்சி துவங்க இருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் ஓர்லேண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். தோல்விக்குப் பிறகு முதல் முறையாக பொது மேடையில் டிரம்ப் பேசியதாவது: புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் எந்த திட்டமும் இல்லை. குடியரசுக் கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த போகிறேன். 3வது முறையாக, வரும் 2024ம் ஆண்டு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட இருக்கிறேன்.