மைசூரு: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்த இரண்டாம் கட்ட முகாம் தொடங்கியுள்ள நிலையில் வசதியில்லாத 1000 ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த 2.50 லட்சம் நிதி வழங்கி மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் தடுப்பூசி முகாமை ராஜமாதா பிரமோதா தெவி உடையார் தொடங்கி வைத்தார். மைசூரு ஜேஎஸ்எஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து ராஜமாதா பிரமோதா ேதவி உடையார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் கொரோனா விதிமுறையை கடைபிடிப்பது முக்கியம். கொரோனா குறித்து யாரும் பயப்பட வேண்டாம்.