பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தீ விபத்து

பூந்தமல்லி: பூந்தமல்லி ஜேம்ஸ் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்(37). தனியார் கல்லூரி பேராசிரியர். வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேலூருக்கு  சென்றுவிட்டார். நேற்று இவரது வீட்டில் பிரிட்ஜின் கம்ப்ரசர் வெடித்து தீப்பிடித்தது. தகவலின்பேரில் ஆவடி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை  அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த சோபா, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

Related Stories: