புதுடெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரப்பிய டூல்கிட் விவகாரத்தில், திசா ரவியுடன் குற்றம்சாட்டப்பட்ட நிகிதா ஜேக்கப் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லகைளில் திரண்டு விவசாயிகள் மூன்று மாதங்களாக தொடர் போரட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் குறித்து தகவல் தெரிவிக்கும் டூல்கிட் ஆவணத்தை சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக டெல்லி போலிசார் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திசா ரவி என்பவரை கைது செய்தனர். அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.