சென்னை: சட்டமன்ற தேர்தல் பணிக்காக வரும் 8ம் தேதி நடைபெற இருந்த காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு, ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும் என்று சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலியாக உள்ள 11,813 இடங்களுக்கான எழுத்து தேர்வு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி தமிழகம் முழுவதும் 37 மாவட்ட தலைநகரங்களில் நடந்தது. இந்த தேர்வை 5,50,314 பேர் எழுதினர். எழுத்து தேர்வுக்கான முடிவு கடந்த 19ம் தேதி சீருடைப்பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் வெளியிடப்பட்டது.