சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொண்டர்களுக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வென்றெடுப்பதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும்மேலாக நாம் போராடி வருகிறோம். பரபரப்பான நிமிடங்களுக்குப் பிறகு கடந்த 26ம் தேதி பிற்பகலில் வன்னியர் இடப்பங்கீட்டு சட்டமுன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப் பேரவையில் சட்டம் இயற்றப்பட்ட நாளிலேயே வன்னியர் இடப்பங்கீட்டு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தது மட்டுமின்றி, அதே நாளிலேயே அரசிதழிலும் வெளியிடப்பட்டது.