சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை வழங்கி வருகின்றன. இந்தநிலையில், அமமுக சார்பில் நாளை முதல் விருப்பமனு வினியோகம் செய்யப்படுகிறது. கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம். காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் விருப்பமனு வினியோகம் நடைபெறும். நாளை தொடங்கும் விருப்பமனு வினியோகமானது வரும் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், தி.நகரில் உள்ள கிருஷ்ணபிரியா இல்லத்தில் தங்கியுள்ள சசிகலா சத்தம் இல்லாமல் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.