புதுடெல்லி: பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட புகாரில் விசாரிக்க சென்றபோது கான்ஸ்டபிளை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தெற்கு டெல்லியின் சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவர் ஷிவம். இவர் இளம் பெண் ஒருவரை மிரட்டி தன்னை அடிக்கடி வந்து சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், வர மறுத்தால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியதோடு, சில்மிஷத்தில் ஈடுபட்டு தவறாக நடக்க முயன்றார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், போலிசில் புகார் அளித்தார். இதையடுத்து, கேஎம் புர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் கோமல், சந்தீப் யாதவ் மற்றும் கான்ஸ்டபிள் நேரு மூவரும் ஐஎன்ஏ சர்க்கில் பகுதிக்கு சென்றனர். அங்கு தான் பாதிக்கப்பட்ட பெண்ணை வருமாறு ஷிவம் மிரட்டல் விடுத்தார். அதன்படி, அங்கு வந்த ஷிவம், போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள கால்வாயில் குதித்தார்.