×

கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தூத்துக்குடி: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் போது, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கல் குவாரிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர். போராட்டம் காரணமாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ambassador ,Calguari , The public besieged the Thoothukudi Collector's Office to protest the construction of the quarry
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...