சென்னை: சென்னை சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை விசாரிக்கும் அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். ஏ.டி.எஸ்.பி.கோமதிக்கு பதில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசி விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு என்பதால் எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.