ஜலிஸ்கோ: மெக்சிகோவில் நடந்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர். ஒரு பெண், 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மெக்சிகோவில் சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகம் நடக்கும் இடமாக ஜலிஸ்கோ மாகாணம் உள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில், இந்த மாகாணத்தின் தலைநகரான குவாடலஜராவின் புறநகர்ப் பகுதியில் 18 பிளாஸ்டிக் பைகளில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல், கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரே இடத்தில் 113 சடலங்கள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்தாண்டு மட்டும் இதுேபால் 189 சடலங்களை அரசு கண்டறிந்தது.