சென்னை: பிரதமர், ஆளுநர் பெயரை கூறி மூலிகை பெட்ரோல் தயாரிக்க பிரதமர் அலுவலகத்தின் பரிந்துரை கடிதம் பெற முயற்சி செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த ராமர் பிள்ளைக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு பிரதமர் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் பெயர்களில் மத்திய அரசு டெண்டர்கள், பாஜ கட்சி சார்பில் எம்.பி. சீட் வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்த மோசடி நபர்களான மகாதேவ் ஐயா (59), அவரது மகன் அங்கீத் (29) மற்றும் ஒசூரை சேர்ந்த புரோக்கர் ஓம் (49) ஆகிய மூவரையும் அதிரடியாக கடந்த 10ம் தேதி கைது செய்தனர்.