சென்னை: காஞ்சிபுரத்தில் கட்சி நிர்வாகி திருமண விழாவிற்கு வந்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கர்நாடகா அரசு எதிர்ப்பு தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது. வெள்ளம் ஏற்படும் காலத்தில் காவிரியில் உபரி நீராக வெளியேறும் நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் பயன்படும். வெள்ளப்பெருக்கின் போது ஏற்படும் உபரி நீரை தமிழகம் பயன்படுத்துவதற்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்ற மனிதாபிமானமற்ற செயல். தமிழகத்தில் தொடங்கப்பட்ட இத்திட்ட பணிகள் தொடர்ந்திட கர்நாடக அரசு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது.