கொடைக்கானல்: கொடைக்கானலில் ஏரி அருகே நகராட்சி நிலத்தில் தனியா ஆக்கிரமித்துள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இதை அகற்ற சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொடைக்கானல் ஏரிக்கு நீர் வரத்துள்ள ஜிம்கானா பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் நீரேற்று நிலையம் உள்ளது. இப்பகுதி அருகே, நகராட்சி சாலைப் பகுதியில் தனியார் ஆக்கிரமித்து வேலி அமைத்தனர். இதனால், சாலையின் அளவு குறைந்துள்ளது. மேலும், இப்பகுதியில் பொது மக்கள் பயன்படுத்துவதற்கு தடை ஏற்பட்டது. சீசன் காலங்களில் ஒருவழிப்பாதையாக அமல்படுத்தப்படும். அப்போது கனரக வாகனங்கள் சுற்றுலா இடங்களுக்கு அனுமதிக்கப்படாது. இந்த சூழலில் ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்படும்.