வத்திராயிருப்பு: பவுர்ணமி தேதி குழப்பத்தால் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் படையெடுத்தது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. கடந்த 24ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் மாசி பவுர்ணமியாக இருந்தும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. காலண்டரில் நேற்று இரவு தான் மாசி பவுர்ணமி என்று குறிப்பிட்டதால் பக்தர்கள் எண்ணிக்கை வருகை அதிகரித்தது. நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து சென்னை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன் குவிந்தனர்.