சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பு செய்யக்கூடாது என்று தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஆணையம் பரிந்துரைத்தை ஊதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் பிரபாகர், பொதுச்செயலாளர் ஜெயந்தி ஆகியோர் கூட்டாக சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் சூழலில் பணியில் இருக்கும் அலுவலர்கள் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது அவர்களின் வேலை வாய்ப்பு கதவை தட்டி பறிப்பதாகும். எனவே அரசு பணியில் பணியில் பணிபுரியும் அலுவலர்களின் வயதை நீட்டிப்பு செய்ததை ரத்து செய்ய வேண்டும். அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு பணி நீட்டிப்பு செய்வதோ அல்லது வேறு எவ்வகையிலும் அவர்களை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்க கூடாது. தமிழக அரசில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஒரு நபர் ஆணையத்தின் ஊதியத்தை நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்தது. அதன் அடிப்படையில் 7வது ஊதிய ஆணையத்தில் ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.