தமிழகத்தில் புதிதாக 486 பேருக்கு கொரோனா: 5 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 486 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 52,628 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 486 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தற்போது வரை லண்டனில் இருந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 56 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,51,063 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 491 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 8,34,534 பேர் குணமடைந்துள்ளனர். 4,036 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,493 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: