திருமண நிகழ்ச்சியில் நகை அபேஸ்

சென்னை: சாலிகிராமம் தம்பா தெருவை சேர்ந்த விஜயராஜேசுக்கு விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் சாலையில் உள்ள மண்டபத்தில் கடந்த 24ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மறுநாள் திருமணத்தின் போது அணிவதற்காக கொண்டு வந்த 3 பவுன் நகையை மணமகன் அறையில் வைத்திருந்தார். அதன்படி மறுநாள் காலையில் நகையை எடுக்க சென்றபோது, மாயமானது தெரிந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில்  கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஜெனிஸ் (37). எம்ஜிஆர் பல்கலைக் கழக துணை பேராசிரியர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு  பிரோவில் இருந்த 5 சவரன் நகைகள், ஒரு லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

Related Stories: