அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடந்த ‘அடிலெய்டு சர்வதேச மகளிர் டென்னிஸ்’ போட்டியில் போலாத்தின் இகா ஸ்டிவெய்க் சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் ‘சர்வதேச மகளிர் டென்னிஸ்’ போட்டி பிப்.22ம் தேதி தொடங்கியது. இதன் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), பெலிண்டா பென்சிக்(ஸ்விட்சர்லாந்து, 12வது ரேங்க்), ஜோன்னா கொன்டா(இங்கிலாந்து, 15வது ரேங்க்), இகா ஸ்வெய்டக்(போலாந்து, 17வது ரேங்க்) என முன்னனி வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல் அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ஜில் டீச்மேன்(23) உடன் மோதிய இகா(19) 2-0 என்ற நேர் செட்டில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். அதேபோல் 2வது அரையிறுதியில் அமெரிக்காவின் கோரி காஃப்(16) உடன் விளையாடிய பெலிண்டா(23) 2-1 என்ற கணக்கில் போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.