சென்னை: கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்ற சத்குருவின் கருத்திற்கு உடன்படுவதாக நடிகர் சந்தானம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார். ‘11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என கூறி உள்ள சத்குரு, இது தொடர்பான வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்துள்ளார்.