×

கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும்: சத்குருவின் கருத்திற்கு நடிகர் சந்தானம் உடன்படுவதாக ட்வீட்டரில் பதிவு

சென்னை: கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்ற சத்குருவின் கருத்திற்கு உடன்படுவதாக நடிகர் சந்தானம் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தி உள்ளார். ‘11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது என கூறி உள்ள சத்குரு, இது தொடர்பான வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் சந்தானம்  தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், சத்குருவின் கருத்திற்கு முற்றிலும் உடன்படுவதாக ட்வீட் செய்துள்ளார்.

பல கோவில்களில் ஒருகால பூஜைகூட நடக்காமல் இருப்பதை பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது. அங்கு போதுமான அளவு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்யப்படவில்லை. அரசாங்கம் கோவில்களை நிர்வகிக்க வேண்டுமென்றால், அவர்கள் தாங்கள் செய்வது மக்களாட்சி அல்ல, இறையாட்சி என அறிவிக்க வேண்டும் என கூறியிருந்தார். கிழக்கிந்திய கம்பெனி நம் நாட்டு செல்வத்தை திருடியதோடு, கோவில்களை கையகப்படுத்தியதால் நம் ஆன்மீகத்தையும் அடக்கி ஒடுக்கினர் என பதிவிட்டிருந்தார். கோவில்களை பக்தர்களிடமே கொடுத்துவிடுங்கள் என சந்தானம் பதிவிட்டுள்ளார்.


Tags : Tamil Government ,Sadhguru , Temples, Devotees, Government of Tamil Nadu, Satguru, Santhanam, Tweet
× RELATED அரசியலில் பெண்களுக்கு எதிராக...