காஞ்சிபுரம்: உங்கள் பிரச்னைகளை தீர்ப்பதே எனது முதல் பணி, எனது அரசின் முதல் 100 நாட்கள் போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும் என்ற முழக்கத்துடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ உங்கள் தொகுதியில் மு.க.ஸ்டாலின்’ என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கரசங்கால், துண்டல் கழனி, அண்ணா திடலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்தார். அப்போது, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஆலந்தூர், பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் சான்றிதழ்கள், பட்டா, ஓய்வூதியம், முதியோர் உதவித் தொகை ஆகியவற்றிக்கான விண்ணப்பங்களை மனுவாக அளித்தனர்.