தாம்பரம் : தாம்பரம் அருகே முடிச்சூர், லட்சுமி நகர், 1-வது தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த். எலக்ட்ரிசியன். இவரது மனைவி ஜெபசெல்வி. இவர்களுக்கு சாய்சரண் என்ற மூன்று வயது ஆண்குழந்தை இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் வேலை நிமித்தமாக திருவண்ணாமலைக்கு விஜயகாந்த் புறப்பட்டு சென்றுவிட்டார்.இந்நிலையில், நேற்று மதியம் ஜெபசெல்வி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழந்தை சாய்சரண் விளையாடிக் கொண்டிருந்தான். இந்நிலையில், திடீரென குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்த ஜெபசெல்வி பல்வேறு இடங்களில் தேடினார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு, வீட்டிலிருந்து கழிவுநீர் செல்ல அமைக்கப்பட்ட தொட்டியில் சாய்சரண் விழுந்துகிடப்பது தெரியவந்தது.