மதுரை: மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மதுரை உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் உள்ள பண்ணை தோட்டத்தில் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. சிறுநீரகப் பிரச்னையால் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தா.பாண்டியன் நேற்று காலமானார்.