சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் தலைமையிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பஸ் ஸ்டிரைக் வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.