சென்னை : ‘’இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’’ என்று புதிய கட்சியை தொடங்கிய அர்ஜுனமூர்த்திக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ரஜினியின் தொடங்கப்படாத கட்சியில் பணியாற்றியவர் பாஜக முன்னாள் நிர்வாகி அர்ஜுன மூர்த்தி. இவர் ‘’இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி’’ என்று புதிய கட்சியை தொடங்கி உள்ளார். சென்னை கோயம்பேட்டில் இந்த கட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. ’’இது வேற லெவல் அரசியல், இது தமிழ்நாட்டின் விஸ்வரூப அரசியல், உண்மையான மாற்றத்தின் அரசியல்,தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும் அரசியல், இந்த கட்சிக்கு ஜாதி, மதம் இல்லை… ஆணவத்தால் வரும் மதமும் இல்லை…’’ தன் புதிய கட்சி குறித்து அர்ஜூனமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.