திண்டுக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மருத்துவர் சமூக நலச்சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி 4 ஆயிரம் சலூன் கடைகள் மூடப்பட்டன.திண்டுக்கல்லில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரம் சலூன் கடைகளை மூடி, ஒரு நாள் கவனயீர்ப்பு போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் பரமசிவம், செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.