×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர் சமூக நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்-திண்டுக்கல்லில் 4 ஆயிரம் சலூன் கடைகள் மூடல்

திண்டுக்கல் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல்லில் மருத்துவர் சமூக நலச்சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையொட்டி 4 ஆயிரம் சலூன் கடைகள் மூடப்பட்டன.திண்டுக்கல்லில், தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரம் சலூன் கடைகளை மூடி, ஒரு நாள் கவனயீர்ப்பு போராட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் பரமசிவம், செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார்.

மாநகர தலைவர் முனீஸ்வரன், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ‘கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் 5 சதவீதம் உள் இட ஒதுக்கீடும், ஜாதியின் பெயரால் எங்களுக்கு இழைக்கப்படும் இன்னல்களுக்கு எதிராக வன்கொடுமை சட்ட பாதுகாப்பு வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் கௌதமன் நன்றி கூறினார்.

Tags : Dindigul: A protest was held in Dindigul by the Doctor Social Welfare Association demanding various things. 4 thousand saloon in turn
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...