சேலம் : கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான குங்ஃபூ விளையாட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் சேலம் லீ சாவ்லின் குங்ஃபூ மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி ஆப் இந்தியா சார்பில் மாஸ்டர் ரவிக்குமார், பாலமுருகன் தலைமையில் 45 மாணவர்கள், 25 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாணவ, மாணவியர் 105 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை சேலம் அணி வென்று சாதனை படைத்தது.