பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனர் நாள் விழா

பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவனர் நாள் மற்றும் கல்லூரி நாள் விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தலைவர் சகுந்தலா சோமசுந்தரம் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்முஹைதீன் மரைக்காயர் முன்னிலை வகித்தார். கல்லூரி தாளாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அதிராம்பட்டினம் தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் தாஜுதீன், சென்னை ஜிஹெச் இண்டக்சன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உற்பத்தி மேலாளர் ஆனந்தமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கல்லூரி முதல்வர் சீனிவாசன் ஆண்டறிக்கை வாசித்தார். பட்டுக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சாம்பசிவம், தாஜுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர் தாஜுதீன் கலந்து கொண்டு பேசினார்.விழாவில் தேசிய வாக்காளர் நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கொரோனா பேரிடர் காலத்தில் சேவையாற்றிய என்.சி.சி. மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் மின்னணுவியல் துறைத்தலைவர் அமலோற்பவசெல்வி நன்றி கூறினார்.

Related Stories: