டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு

காங்கயம் : காங்கயம் ஒன்றியம், பரஞ்சேர்வழி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்காட்டுவலசு, ஆவாரங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து(62). விவசாயி. இவர் தனது மனைவி மற்றும் மகனுடன் மேற்கண்ட முகவரியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று  தனது டிராக்டரில் சென்னிமலை கடைவீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

சிவியார்பாளையம் என்ற பகுதியில் வந்தபோது வளைவு பகுதியில் டிராக்டர் திடீரென அருகே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிராக்டர் அடியில் சிக்கி உடல் நசுங்கி தங்கமுத்து சம்பவயிடத்திலேயே இறந்தார். இத்தகவலறிந்த காங்கயம் போலீசார் தங்கமுத்துவின் உடலை மீட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: