கச்சத்தீவில் சீனாவின் காற்றாலை - தமிழக மீனவர்கள் அச்சம்

சென்னை: கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் சீனா காற்றாலை அமைக்க இலங்கை அரசு அனுமதி தந்ததால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்திய கடலோர எல்லைகளில் சீனா ஆதிக்கம் அதிகரித்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என புகார் எழுந்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படும் நிலையில் சீனாவுக்கும் அனுமதி தந்ததால் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கும் இலங்கை நடவடிக்கையை தடுக்க மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: